கடலூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை
கடலூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ மாணவிகளுக்கான நேரடி சேர்க்கை தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்
HIGHLIGHTS
கடலூர் மாவட்டத்தில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2021 ஆம் ஆண்டு பயிற்சியாளர்கள் சேர்க்கை, மற்றும் காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் சேர்வதற்கு 15.09.2021 வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம்.
மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் அறிய www.skillinaining.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ 750/- உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகம், காலணி சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது.
மேலும் பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங், உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இந்த இணையதள வழியிலான நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார்
விண்ணப்பக் கட்டணம் ரூ 50/- ஐ விண்ணப்பதாரர் Dehit card/ Credit Card/ Net Bankinp/G Pay வாயிலாக செலுத்தலாம்.மேலும் விபரங்களுக்கு 04142 290273 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.