கடலூரில் கட்டுமான தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் கட்டுமானத் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.கடலூர் லாரன்ஸ் சாலை நான்கு முனை சந்திப்பு அருகே கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்.பொங்கல் தொகுப்புடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மத்திய ,மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திடீரென கட்டுமான தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்