Begin typing your search above and press return to search.
கடலூர்: ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு வாலிபர்கள் சடலமாக மீட்பு
கடலூரில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இரு இளைஞர்களின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
HIGHLIGHTS
கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம்,மதுரா ராசாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் பாலாஜி, முத்துவேல் என்பவரது மகன் அபினேஷ் ஆகிய இருவரும் நேற்று மதியம் மலட்டாறில் குளிக்கச் சென்றுள்ளளனர்.
தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் வரத்தும் அதிகமாக இருப்பதால் ஆற்றில் குளிக்க செல்பி எடுக்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்து வந்த நிலையில்தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறான மலட்டாற்றில் குளிக்கச் சென்ற இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
நேற்று மாலை முதல் காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினரால் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.