/* */

கோவையில் மழையால் சுவர் இடிந்து வீடு சேதம்

கோவை செல்வபுரம் பகுதியில், மழையால் சுவர் இடிந்து வீடு சேதமடைந்தது.

HIGHLIGHTS

கோவையில் மழையால் சுவர் இடிந்து வீடு சேதம்
X

மழையால் சேதமடைந்த வீடு

கோவை மாவட்டம் முழுவதும், கடந்த மூன்று நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை கோவை மாநகர் முழுவதும் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனிடையே, கோவை செல்வபுரம் பகுதியில் வீட்டில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

செல்வபுரம் போயர் வீதி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக, அப்பகுதியில் குடியிருந்து வருகிறார். காலை 6 மணியளவில் ராஜேஸ்வரி வீட்டில் உறங்கி கொண்டிருக்கும் போது, திடீரென வீட்டில் பக்கவாட்டில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் வெளிப்புறத்தில் இருந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாகவும், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் ராஜேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 1 Dec 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!