Begin typing your search above and press return to search.
கோவை மாநகர்கவுண்டம்பாளையம்கிணத்துக்கடவுமேட்டுப்பாளையம்பொள்ளாச்சிசிங்காநல்லூர்சூலூர்தொண்டாமுத்தூர்வால்பாறை
தனியார் பேருந்து மீது கல்வீச்சு: இந்து முன்னணியினர் 2 பேர் கைது
கோவை செல்வபுரத்தில், போராட்டத்தின் போது தனியார் பேருந்து மீது கல்வீசியதாக, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
கோவை செல்வபுரம் சிவாலயா தியேட்டர் அருகில் நேற்று ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகத்தால் நடைபெற்றது. அங்கு, அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சிறிய கோவிலை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த இருவர், அந்த வழியாக சென்ற தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமாகின.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவரை செல்வபுரம் காவல் துறையினர் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.