/* */

கோவை - அத்தியாவசியப்பொருள் வழங்கிய சூலூர் விமானப்படை அதிகாரிகள்

ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கோவை சூலூர் விமானப்படை அதிகாரிகள் சார்பில், அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

கோவை - அத்தியாவசியப்பொருள் வழங்கிய சூலூர்  விமானப்படை  அதிகாரிகள்
X

கோவை, சூலூரில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரிகள் சார்பில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில், மாநகரப்பகுதிகளுக்கு பிறகு அதிக பாதிப்புள்ள இடமாக சூலூர் பகுதி உள்ளது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

காடாம்பாடி, காங்கேயம் பாளையம், செங்கத்துறை ஆகிய பகுதிகள் சூலூர் விமானப்படை தளத்துக்கு அருகில் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் காவல்துறையால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை எளிய மக்களுக்கு விமானப்படைத்தள நல்வாழ்வு சங்கம் சார்பில், அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. காங்கேயம்பாளையத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு, நிவாரணப் பொருட்களை விமானப்படை அதிகாரிகள் வழங்கினர். இந்த நிகழ்வின்போது காங்கேயம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 May 2021 7:55 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!