/* */

விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக சோமனூர் கடையடைப்பு

விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் இன்று 47 வது நாளை எட்டியுள்ளது. இதற்கு ஆதரவாக சோமனூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக சோமனூர் கடையடைப்பு
X

சோமனூரில் மூடப்பட்டுள்ள கடைகள்.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 47 வது நாளை எட்டியுள்ளது. இதன் காரணமாக கோவை திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு லட்சம் விசைத்தறி கூடங்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் இதனை நம்பி உள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்நிலையில் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சோமனூர், கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை, சாமளாபுரம், தெக்கலூர் ஆகிய பகுதியில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக ஆயிரக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. சோமனூர் சுற்றுவட்டார பகுதி மக்களின் வாழ்வாதரமாக விசைத்தறி தொழில் விளங்கி வருவதாகவும், விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக அதனை சார்ந்துள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் அப்பகுதி மக்கள், இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Updated On: 25 Feb 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்