/* */

பொள்ளாச்சியில் உயரழுத்த மின்பாதை அமைக்க மின்வாரியம் நடவடிக்கை; மரங்கள் வெட்டி அகற்றம்

Coimbatore News, Coimbatore News Today - பொள்ளாச்சியில் மின் மாற்றியுடன், உயரழுத்த மின்பாதை அமைக்க மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

பொள்ளாச்சியில் உயரழுத்த மின்பாதை அமைக்க மின்வாரியம் நடவடிக்கை; மரங்கள் வெட்டி அகற்றம்
X

Coimbatore News, Coimbatore News Today - பொள்ளாச்சியில், உயரழுத்த மின்பாதை அமைக்க மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.  

Coimbatore News, Coimbatore News Today-- பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் நகராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. மார்க்கெட் ரோடு நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், சீரான குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி கட்டப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மின் இழுவை திறன் அதிகமாக தேவைப்படுகிறது. இதனால் மின் மாற்றியுடன் கூடிய உயரழுத்த மின் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக இடையூறாக உள்ள மரங்கள் வெட்டி அகற்றும் பணி நேற்று நடந்தது. இதையொட்டி அந்த பகுதியில் மின்வினியோகம் தடை செய்யப்பட்டது. மேலும் வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது,

மகாலிங்கபுரத்தில் தரைமட்ட தொட்டி, குழாய் பதித்தல், மோட்டார் பொருத்தல், மின்சார பணி உள்ளிட்ட பணிகளுக்கு சேர்த்து மொத்தம் ரூ.24 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது தரைமட்ட தொட்டி கட்டும் பணி நிறைவு பெற்று உள்ளது. இதைத்தொடர்ந்து கூடுதலாக மின் இழுவை திறன் தேவைப்படுவதால், மின்மாற்றியுடன் கூடிய உயரழுத்த மின் பாதை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக சப்-கலெக்டர் அனுமதி பெற்று, மரங்கள் வெட்டப்படுகின்றன. இதில் 4 மரங்கள் முழுமையாகவும், 4 மரங்களுக்கு கிளைகள் மட்டும் வெட்டப்படுகிறது. இதை தொடர்ந்து மின் வினியோகம் நிறுத்தப்பட்டு மரங்கள் வெட்டும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினா்.

பொதுவாக, ரோட்டோரங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டக்கூடாது என்பதுதான் நடைமுறை, ஆனால், இதுபோன்ற முக்கிய பணிகளுக்காக, அத்யாவசிய தேவைகளுக்காக அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்று மட்டுமே, மரங்களின் கிளைகள் அகற்றப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே, இடையூறாக உள்ள மரங்கள் முழுமையாக வெட்டி அகற்றப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பச்சை மரங்களை எக்காரணம் கொண்டும் வெட்டவோ, சேதப்படுத்தவோ கூடாது எனவும், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 31 March 2023 7:37 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?