/* */

ஊர்க்காவல் படையில் பணி செய்ய வாய்ப்பு

கோவையில், ஊர்க்காவல் படையில் பணியாற்ற ஆர்வமுடைவர்கள் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஊர்க்காவல் படையில் பணி செய்ய வாய்ப்பு
X

கோவையில், ஊர்க்காவல் படையில் சேர விரும்புவோர், விண்ணப்பிக்கலாம்.

.இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை மாநகர ஊர்க்காவல் படையில் சேர்ந்து, காவல்துறையுடன் இணைந்து பணிபுரிய ஆர்வம் உள்ள ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் காந்திபுரம் சி.1 காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள, ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.

10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியே கல்வித்தகுதி. கோவை மாநகர போலீஸ் எல்லை பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். சேவை மனப்பான்மை, உடல் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், முகவரி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்திருக்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Aug 2022 12:58 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...