Begin typing your search above and press return to search.
கோவை மாநகர்கவுண்டம்பாளையம்கிணத்துக்கடவுமேட்டுப்பாளையம்பொள்ளாச்சிசிங்காநல்லூர்சூலூர்தொண்டாமுத்தூர்வால்பாறை
ஊர்க்காவல் படையில் பணி செய்ய வாய்ப்பு
கோவையில், ஊர்க்காவல் படையில் பணியாற்ற ஆர்வமுடைவர்கள் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
.இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாநகர ஊர்க்காவல் படையில் சேர்ந்து, காவல்துறையுடன் இணைந்து பணிபுரிய ஆர்வம் உள்ள ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் காந்திபுரம் சி.1 காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள, ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.
10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியே கல்வித்தகுதி. கோவை மாநகர போலீஸ் எல்லை பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். சேவை மனப்பான்மை, உடல் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், முகவரி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்திருக்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.