/* */

கோவையில் மார்ச் 9-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

கோவையில் மார்ச் 9-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
X

பைல் படம்

கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடா்பாக கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூா், மதுக்கரை, அன்னூா் ஆகிய நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் மார்ச் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

அதில், ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கிக் கடன், கல்விக் கடன் தொடா்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் தொடா்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், நிலம், வருமானம் மற்றும் சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரிக்கப்படும்.

மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. அத்துடன், மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக் கொள்ளப்படும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்றக் கட்டணம் முழுமையாக திருப்பித் தரவும் வாய்ப்பு உள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு, இத்தகைய வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில், சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீா்வு காணப்படும். மேலும், இத்தகைய வழக்குகளுக்கு தீா்வு காண்பதற்காக, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் வரும் மார்ச் 8-ஆம் தேதி வரை சிறப்பு அமா்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 Feb 2024 1:40 PM GMT

Related News