/* */

முன்பகையால் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 5 பேர் கைது

இன்ஸ்டாகிராமில் அரிவாள் வைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட, எதிர் தரப்பினர் கிண்டல் செய்ததாக தெரிகிறது.

HIGHLIGHTS

முன்பகையால் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு:  5 பேர் கைது
X

 கைது செய்யப்பட்டவர்கள்

கோவை காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் (26). அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். திருமணமான இவருக்கு ஒரு மகள் உள்ளார். அசோக்குமார் உள்ள தரப்புக்கும், அடுத்துள்ள பகுதியில் உள்ள குழு இளைஞர்களுக்கும் இடையே அடிக்கடி ஏரியா சண்டை நடைபெற்று வந்துள்ளது. சம்பவத்தன்று, இன்ஸ்டாகிராமில் அரிவாள் வைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை, அசோக் குமார் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த எதிர்த்தரப்பு வாலிபர்கள் சிலர், கிண்டல் செய்ததாக தெரிகிறது. இவர்களுக்குள் ஏற்கனவே முன்பகையோடு ஏரியா தகராறும் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஐந்தாம் தேதி அசோக் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தபோது, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அவரை கொடூரமாக வெட்டிகொலை செய்து விட்டு தப்பினர். அசோக்குமார் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கோவை புலியகுளம் விக்கு (எ) சண்முகம், கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், சரவணம்பட்டியை சேர்ந்த பாபு, அமர்நாத் மற்றும் கணபதியைச் சேர்ந்த பிரசாந்த் என 5 பேரை கைது செய்துள்ள போலீசார், மணிகண்டன் என்கின்ற ஒர்க் ஷாப் மணியை தேடி வருகின்றனர்.

Updated On: 8 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!