/* */

ஊரடங்கு விதிமீறல்: தேநீர் கடைக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் சீல்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், வாடிக்கையாளர்களை கடையில் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி கடைக்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

ஊரடங்கு விதிமீறல்:  தேநீர் கடைக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் சீல்
X

கோவையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறிய கடைக்கு, சீல் வைத்த அதிகாரிகள்.

தமிழகத்தில், கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இதனால், ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து, அவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. கோவையிலும் சில தளர்வுகள் இன்று முதல் அமலாகியுள்ளன. அவ்வகையில், தேநீர் கடைகளிலில், பார்சல் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திவான் பகதூர் சாலையில் உள்ள தேநீர் கடை ஒன்று, ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக தகவல் வந்தது. அங்கு விரைந்த கோவை மாநகராட்சி அதிகாரிகள், வாடிக்கையாளர்களை கடையில் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதித்ததை கண்டனர். இதையடுத்து, அந்த தேநீர் கடையை பூட்டி, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Updated On: 28 Jun 2021 11:55 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?