/* */

கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட 870 மது பாட்டில்கள் பறிமுதல்

மினி லாரியில் இருந்த 12 பெட்டிகளை பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

கர்நாடகாவில் இருந்து  கடத்திவரப்பட்ட 870 மது பாட்டில்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

கோவையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் தொடர்ந்து கள்ளச்சந்தையில் நடைபெறும் மது விற்பனையை தடுக்க ரோந்து பணிகள் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியில் பதுக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மினி லாரியில் இருந்த 12 பெட்டிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் நடத்திய சோதனையில் 5 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பெட்டிகளில் இருந்து மொத்தம் 870 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல மளிகை கடை உரிமையாளரிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் கள்ளச்சந்தை மது விற்பனையில் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்த சூர்யா, கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார் மற்றும் மளிகை கடை உரிமையாளர் முத்துக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 24 Jun 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!