/* */

கொரொனா நிவாரண நிதிக்கு தன் சம்பளத்தை வழங்கிய தலைமை காவலர்

கொரொனா பேரிடர் நிதிக்காக.

HIGHLIGHTS

கொரொனா நிவாரண நிதிக்கு தன் சம்பளத்தை வழங்கிய தலைமை காவலர்
X

திண்டுக்கல் மாவட்டம் பழனி குபேரபட்டினத்தை சேர்ந்தவர் பாபு( 36). இவரது தந்தை தலைமை காவலராக பணிபுரிந்துள்ளார். பி.ஏ தமிழ் இலக்கியம் படித்துள்ள பாபு கடந்த 2008 ஆம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்துள்ளார்.

தற்போது ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலையில் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ தனியார் நிறுவனங்களும் , பொது நல அமைப்புகளும், பொதுமக்களும் தங்களால் முடிந்த பங்களிப்பை அரசுக்கு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தலைமை காவலர் பாபு தனது ஒரு மாத சம்பளமான 34,474 ரூபாயை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்திடம் கொரொனா பேரிடர் நிதிக்காக வழங்கினார்.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தனது ஒரு மாத சம்பளத்தொகையான 25 788 ரூபாயை வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னால் முடிந்த உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர வேண்டும்.

பேரிடர் காலங்களில் அனைவரின் பங்களிப்பும் இருந்தால் கட்டாயமாக நாம், கொரொனா இரண்டாம் அலையை முறியடிக்க என பாபு தெரிவித்தார்

Updated On: 11 May 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!