/* */

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

கோவை மாவட்ட அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கோவை கலெக்டர் சமீரன் வாழ்த்து தெரிவித்தார்

HIGHLIGHTS

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து
X

கலெக்டர் சமீரனுடன் நீட் தேர்வில் வெற்றி பெற்ற கோவை அரசுப்பள்ளி மாணவர்கள்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் படித்து தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுடன் சுவேதா, யுவன்ராஜ், ஸ்ருதி, அபர்ணா, தேவி, அப்ரின் ஜஹான், தர்சினி, பூர்ணிமா, சங்கீதா, சந்திராதேவி உள்ளிட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டனர்.

உயர்கல்வி குறித்தும் கலெக்டர் சிறிது நேரம் பேசினார். மாவட்ட ஆட்சியர் அழைத்து வாழ்த்து தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 8 Feb 2022 10:05 AM GMT

Related News