/* */

கோவையில் ரூ. 16.90 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வெளியேற்றும் நிலையம் திறப்பு.. வானதி சீனிவாசன் எம்எல்ஏ பங்கேற்பு…

கோவை ராமநாதபுரம் பகுதியில் ரூ. 16.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வெளியேற்றும் நிலையத்தை வானதி சீனிவாசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

கோவையில் ரூ. 16.90 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வெளியேற்றும் நிலையம் திறப்பு.. வானதி சீனிவாசன் எம்எல்ஏ பங்கேற்பு…
X

கோவை ராமநாதபுரம் கருப்பராயன் கோயில் வீதியில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 66 ஆவது வார்டு பகுதியான ராமநாதபுரம் கருப்பராயன் கோவில் வீதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 16.90 லட்சம் மதிப்பிலான கழிவு நீர் வெளியேற்றும் நிலையம் அமைக்கப்பட்டது. அந்த கழிவு நீர் வெளியேற்றும் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று திறந்து வைத்தார். பின்னர், அந்தப் பகுதி மக்களிடம் குறைகளை அவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, வானதி சீனிவாசன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை ராமநாதபுரம் கருப்பராயன்கோவில் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவு நீரை அகற்றுவதில் மிகப்பெரிய சிரமங்கள் இருந்தது. இதனால் மக்களுக்கு சுகாதார சீர்கேடு உடல்நலம் பாதிப்பு ஆகியவை அதிகமாக இருந்தது. அதனை சரி செய்து தருவதாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தோம்.

அதன்படி இன்று கழிவு நீரை அகற்றுவதற்கான பம்பிங் ஸ்டேஷன்(கழிவு நீர் வெளியேற்று நிலையம்) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டி உள்ளது. பட்டா வசதியும் ஏற்படுத்தி தர வேண்டி உள்ளது.

பட்டா வசதி ஏற்படுத்தி தருகின்ற இடத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி வருகிறேன். கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது. செய்கின்ற விஷயத்தை ஊழல் இல்லாமல் நேர்மையாக செய்யுங்கள் என்று தான் தாங்கள் கூறி வருகிறோம்.

ஆனால் செய்யவே போவதில்லை என கூறுவது சரியல்ல. அப்படி பார்த்தால் சாலைகள் குறித்து பல்வேறு புகார்களை முன் வைத்தால் வெறும் குழிகளை மட்டும் அடைத்து விட்டு போய்விடுகிறார்கள். அது ஒரு மழை பெய்தால் போய்விடுகிறது. அதை சுட்டி காட்டினால் அதை மாற்றுவதில்லை.

மேலும், தமிழகத்தில் மருந்து விநியோகம் செய்வதில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. மக்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பதில்லை. அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை விநியோகம் செய்யும் நிறுவனத்தார்களை முதல்வரின் இல்லத்தில் இருக்கும் ஒருவர் அழைத்து தங்களுக்கு கமிஷன் கொடுத்தால்தான் மருந்துகளை விநியோகம் செய்ய முடியும் என பேசுகிறார்.

தமிழக முதல்வர் ஒவ்வொரு துறையிலும் இருக்கின்ற குடும்ப ஆதிக்க சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக வீடுகளில் தான் பாகம் பிரிப்பார்கள். ஆனால், இங்கு மாநிலத்தின் முதல்வரின் குடும்பத்தில் மகனுக்கும் மருமகனுக்கும் துறைகளை பிரித்து வருகின்றனர்.

தற்போது மீண்டும் பரவ துவங்கியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து மாநில சுகாதாரத்துறையிடம் கோரிக்கை கொடுக்கிறோம். இது குறித்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசாங்கமும் பல்வேறு இடங்களில் முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Updated On: 28 Dec 2022 12:51 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்