/* */

கோவை 39 வது வார்டு பாஜக வேட்பாளர் குப்பை சேகரித்தபடி தீவிர பிரச்சாரம்

தூய்மை பணியாளர்களுடன் இணைந்து வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்தபடி சௌமியாராணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

HIGHLIGHTS

கோவை 39 வது வார்டு பாஜக வேட்பாளர் குப்பை சேகரித்தபடி தீவிர பிரச்சாரம்
X

 செளமியா ராணி வாக்கு சேகரிப்பு

கோவை மாநகராட்சியின் 39 வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுபவர் சௌமியாராணி பிரதீப். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் 39 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகள் முறையாக சேகரிப்பதில்லை என பொதுமக்கள் தெரிவித்த நிலையில், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்தபடி சௌமியாராணி பிரச்சாரம் மேற்கொண்டார். குப்பைகளை சேகரித்தபடி துண்டு பிரசுரங்கள் கொடுத்து பா.ஜ.கவிற்கு வாக்களிக்கும்படி சௌமியாராணி பிரதீப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.

துண்டு பிரசுரங்களில் தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் துவங்கி தரப்படும், 24 மணி நேரமும் செயல்படும் வாட்ஸ் அப் சேவை அமைத்து பிரச்சினைகள் தீர்க்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றார்.

Updated On: 17 Feb 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்