/* */

பிஜேபி சாதி வெறிபிடித்த கட்சி : அந்தியூர் செல்வராஜ் குற்றச்சாட்டு

பிஜேபி மதவாத ஜாதி வெறி பிடித்த கட்சி். வட நாட்டில் மாட்டு கறி தின்றால் ஜெயிலில் போட்டு விடுவார்கள் என அந்தியூர் செல்வராஜ் கூறினார்.

HIGHLIGHTS

பிஜேபி சாதி வெறிபிடித்த கட்சி : அந்தியூர் செல்வராஜ் குற்றச்சாட்டு
X

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் பேசிய அந்தியூர் செல்வராஜ்.

கோவை வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நல குழு நடத்தும் இளைஞர்கள் இளம் பெண்கள் தேர்தல் பணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், ”திமுக அணிகளில் ஆதிதிராவிடர் அணி சிறப்பாக உள்ளது. இதில் நான் கிளை தலைவராக இருந்து உள்ளேன்.என்னுடைய சொந்தகாரர் இந்த பகுதியில் இருந்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் இது போன்று அணிகள் இல்லை. பிஜேபி மதவாத ஜாதி வெறி பிடித்த கட்சி். வட நாட்டில் மாட்டு கறி தின்றால் ஜெயிலில் போட்டு விடுவார்கள். பேருக்கு தான் ஜனாதிபதி. இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு மரியாதை கிடைப்பது இல்லை.

முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துக்கும் மரியாதை இல்லை. ஜனாதிபதி கோவிலுக்கு வந்து சென்றவுடன், கோவிலில், தண்ணீர் விட்டு கழுவினார்கள் அது தான் பிஜேபி. திமுக கட்சியில் மரியாதை அனைத்தும் கிடைக்கும். நான் ஒரு அருந்ததியர் இனத்தை சேர்ந்தவன், எனக்கு துணை பொதுச் செயலாளர் பதிவு கொடுத்துள்ளனர். இது தான் திமுக.

அருந்ததியர் படித்து முன்வர முடியாது மற்றவர்கள் பிடுங்கி கொள்கிறார்கள். எனவே, அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். இதற்கு, தமிழகம் முழுவதும் கலைஞர் அவர்களை வரவேற்று பேசினோம். நம்முடைய சமூகத்தினர் மாவட்ட ஆட்சியராக வந்து உள்ளனர், இன்னும் பல உயர் பதவிகள் வகித்து வருகின்றனர். நாமக்கலில் அருந்ததியினருக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது. எனவே, இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு இந்த தடவை முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என கூறினார்.

Updated On: 4 April 2024 2:04 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!