/* */

சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானப் பயணிக்கு கொரோனா

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த ஒவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

HIGHLIGHTS

சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானப் பயணிக்கு கொரோனா
X

பைல் படம்.

சிங்கப்பூரில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவரை உடனடியாக தனிமைப்படுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று நாடு முழுவதும் மீண்டும் பரவல் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில சுகாதாரத்துறை சார்பிலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பன்னாட்டு விமான முனையங்களில் மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் அமைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட சுகாதார துறை சார்பில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 2 சதவீதம் பயணிகளிடம் ரேண்டம் முறையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பயணிகளுக்கும் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கோவை கணபதியை சேர்ந்த 41 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த பயணி ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வைரசின் மரபணு சோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் அதிகம்பேருக்கு கொரோனா பாதிப்பு தென்பட்டால் (கிளஸ்டர்கள்) மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவா்களின் சளி மாதிரிகள் மட்டுமே மரபணு சோதனைக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் இதுவரை புதிய கிளஸ்டர்கள் ஏதும் உருவாகவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு கொேரானா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 April 2023 7:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’