/* */

கோவை மாநகராட்சியில் நாளை 31 மையங்களில் தடுப்பூசி போடப்படும் - மாநகராட்சி நிர்வாகம்

கோவை மாநகராட்சியில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு காலை 8 மணி முதல் கோவிஷில்ட் தடுப்பூசி போடப்படும்.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சியில் நாளை 31 மையங்களில் தடுப்பூசி போடப்படும் - மாநகராட்சி நிர்வாகம்
X

கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு காலை 8 மணி முதல் கோவிஷில்ட் தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரு மையத்திற்கு 250 தடுப்பூசிகள் வீதம் 31 மையங்களில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிருந்தவன் நகர் நடுநிலைப் பள்ளி, விளாங்குறிச்சி தர்மசஸ்தா மேல்நிலைப்பள்ளி, நெசவாளர் காலணி மாநகராட்சி பள்ளி, நஞ்சுண்டாபுரம் நாடார் பள்ளி, எஸ்.ஐ.ஹெச்.எஸ் மற்றும் மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Updated On: 12 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!