Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
மும்பையில் இருந்து 2 லட்சம் கோவாக்சீன் தடுப்பூசிகள் சென்னை வருகை!
தமிழகத்திற்கான 2 லட்சம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள் மும்பையிலிருந்து விமானத்தில் சென்னை வந்தன.
HIGHLIGHTS
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுதிரனாளிகளுக்கு அவா்கள் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசிகள் போடுதல் போன்றவைகளிலும் தமிழக அரசு ஈடுப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 2 லட்சம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன.
இவைகள் அனைத்தும் சென்னையில் உள்ள 3 தனியாா் மருத்துவமனைகளுக்காக வந்திருந்தன. 18 பாா்சல்களில் 588 கிலோ தடுப்பூசி மருந்து பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கியதும், விமானநிலைய அதிகாரிகள் அந்த தடுப்பூசி மருந்து பாா்சல்களை தனியாா் மருத்துவமனை எஜென்சிகளிடம் ஒப்படைத்தனா்.