/* */

கள்ளக்காதலனை வைத்து கணவனை கொல்ல முயற்சி செய்த மனைவி உட்பட 3 பேர் கைது

கள்ளக்காதலனை வைத்து கணவனை கொல்ல முயற்சி செய்த மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கள்ளக்காதலனை வைத்து கணவனை கொல்ல முயற்சி செய்த மனைவி உட்பட 3 பேர் கைது
X

கள்ளக்காதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவர்.

திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் வசிக்கும் மணிமாறன் (வயது 42 )என்பவர் அதே பகுதியைச் சார்ந்த அபிமுனிசா என்பவரை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அபிமுனிசா மணிமாறனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தபொழுது வேறு ஒரு நபரான யுவராஜுடன் கள்ள தொடர்பில் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் அபிமுனிசா தனது கள்ளக்காதலன் யுவராஜிடம் தனது கணவர் மணிமாறன் தன்னிடம் அவ்வப்பொழுது தகராறில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த யுவராஜ் தனது ஆதரவாளர் ராம்குமார் உடன் சேர்ந்து நேற்று இரவு மணிமாறனை திருச்சினாங்குப்பம் பகுதியில் பைபர் படகை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு மணிமாறனை கீழே கிடந்த சுத்தியலை எடுத்து தலையில் அடித்ததாக கூறப்படுகிறது

இதனால் மணிமாறன் அலறி அடித்து சத்தம் போட்டதை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்

இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிமுனிசா கள்ளக்காதலன் யுவராஜ் மற்றும் ராம்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 2 May 2022 8:41 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்