/* */

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு

3 தீ அணைக்கும் வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

HIGHLIGHTS

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு
X

திருவொற்றியூர் அடுத்த காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் பழைய படகுகளின் உதிரிபாகங்கள் குப்பைகள் போன்று கொட்டி வைத்திருந்தனர். அந்த இடத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து ராயபுரம் தண்டையார்பேட்டை வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

3 தீ அணைக்கும் வாகனங்கள் மூலம் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 19 May 2022 7:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்