/* */

சென்னை கே.கே.நகர் ஆசிரியர்மீது பாலியல் புகார்: போலீசார் தீவிர விசாரணை

சென்னை கே.கே.நகர் ஆசிரியர்மீது பாலியல் புகார்:  போலீசார் தீவிர விசாரணை
X

சென்னை கே.கே.நகரிலுள்ள தனியார் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், அப்பள்ளியின் முதல்வருக்கு முன்னாள் மாணவர்கள் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பள்ளியில், வணிகவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் ராஜாகோபாலன் . இவர் ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது, மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியர் ராஜகோபாலன் பற்றிய விவரங்களை சென்னை - கே.கே.நகர் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் தலைமையில் பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார்.

இதனிடையே, ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து சென்னை பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகத்திடம் பள்ளிக் கல்வித்துறை விளக்கம் கேட்டுள்ளது. ஆசிரியர் ராஜகோபாலன் மீது நேர்மையான முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ' பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆசிரியர் மீதான பாலியல் புகார் குறித்து பிஎஸ்பிபி பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றும், ஆசிரியர் ராஜகோபலன் மீதான புகாரில் உண்மையிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 May 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்