/* */

ஐதராபாத்தில் இருந்து மேலும் 1.4 லட்சம் டோஸ் கோவாக்சீன் சென்னை வந்தது!

தமிழகத்திற்கு மேலும் 1.4 லட்சம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசி ஐதராபாத்திலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தன.

HIGHLIGHTS

ஐதராபாத்தில் இருந்து மேலும் 1.4 லட்சம் டோஸ் கோவாக்சீன் சென்னை வந்தது!
X

ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய கோவாக்சீன் தடுப்பு மருந்து.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் கட்டுக்குள் வந்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமளவு குறைந்து வருகிறது. ஆனாலும் தமிழக அரசு மாநிலம் முழுவதிலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் தடுப்பூசிகளை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போடுவதில் மாநில அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதோடு அரசுடன் இணைந்து தனியாா் மருத்துவமனைகள், தனியாா் தொழிற்சாலைகள் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதனால் தடுப்பூசிகள் அதிக அளவில் தேவைப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை ஐதராபாத்திலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 12 பாா்சல்களில் 350 கிலோ தடுப்பூசி மருந்துகள் வந்தன. அதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் வந்தன.

விமானநிலைய லோடா்கள் தடுப்பூசி பாா்சல்களை விமானத்திலிருந்து இறக்கி, சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் தமிழக அரசு அதிகாரிகள் மூலம் சென்னையில் உள்ள மருத்துவ குடோனுக்கு அனுப்பி வைத்தனா்.

Updated On: 29 May 2021 6:23 AM GMT

Related News