/* */

'கொலை, கொள்ளை, மிரட்டலே தி.மு.க. ஆட்சியின் சாதனை'- டி.ஜெயக்குமார்

‘கொலை, கொள்ளை, மிரட்டலே தி.மு.க. ஆட்சியின் சாதனை’-என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

HIGHLIGHTS

கொலை, கொள்ளை, மிரட்டலே தி.மு.க. ஆட்சியின் சாதனை- டி.ஜெயக்குமார்
X

சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் பிரச்சாரம் செய்தார்.

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட 48 மற்றும் 53 வது வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது துணி தைத்தும், கறி வெட்டியும் வாக்கு சேகரித்த அவரை இஸ்லாமிய பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது 9 மாத கால ஆட்சியில் மக்களிடையே கடுமையான கோபத்தை சம்பாதித்துள்ள அரசு உண்டென்றால் அது தி.மு.க. அரசுதான். இந்த 9 மாதத்தில் 600 க்கு மேற்பட்ட கொலைகள். இன்றைக்குக்கூட ஒட்டன்சத்திரம் பகுதியில் டாக்டர் தம்பதியினரை கட்டிப்போடப்பட்டு 657 சவரன் நகைகள் கொள்கையடிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு மனிதனுக்கும், குடிமகன் என்ற அடிப்படையில் தமிழகத்தில் ஒரு பாதுகாப்பு இல்லாத நிலையில்தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

தி.மு.க.வை பொறுத்தவரையில் குறுக்கு வழியில் வெற்றிபெறலாம் என்று தேர்தல் நெருங்க, நெருங்கத் தங்களுடைய கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளார்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், ஒரு குடோனைப் பிடித்து அதில் பரிசு பொருட்களை வைத்து, அதை லஞ்சமாக மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று குவித்துவைத்துள்ளனர். கோவை நஞ்சுகொண்டாபுரம் என்ற பகுதியில் கையும், களவுமாக கழக தோழர்கள் இன்றைக்கு அதில் ஒரு பகுதியைப் பிடித்துள்ளார்கள். ஒரு பக்கம் அதிகார துஷ்பிரயோகம், மறு பக்கம் ஓட்டுக்காக பரிசு பொருள் அளிப்பது.

அடுத்த பக்கம் காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு வேட்பாளர்களை மிரட்டுவது, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செய்யாமல் மக்களை ஏமாற்றுவது, சட்டம் ஒழுங்கைக் கேலி கூத்தாக்குவது, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து இப்போது நடைபெறுகிறது.

ஒரு பக்கம் தொடர்ந்து விலைவாசி ஏறிவருகிறது.பொங்கல் பரிசு குறித்து சொல்லவே தேவையில்லை. நாங்கள் ரூ. 2,500 அளித்தோம். ஆனால் அவர்கள் ஒரு ரூபாய்க்கூட அளிக்கவில்லை.வெறும் குப்பையைக் கொடுத்து, அதில்கூட ரூ. 500 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளார்கள். தனக்கு ஒட்டு போட்டவர்கள், போடாதவர்கள் என அனைவருக்கும் நன்மை செய்கின்ற அரசாகத்தான் எந்த அரசும் இருக்கவேண்டும். இதற்கு மாறாக தி.மு.க. அரசு இன்று விருப்பு, வெறுப்போடு செயல்படுகிறது.உதாரணத்திற்கு வாணியம்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேசிய பேச்சால் இஸ்லாமியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட போவதில்லை. இஸ்லாமியர்கள் தி.மு.க.வுக்கு ஓட்டுபோட மாட்டார்கள் என்று தெரிந்துகொண்டு, துரைமுருகன் "நீங்கள் தி.மு.க.வுக்கு ஒட்டுப்போட்டால் மட்டும்தான் உங்களுக்கு எல்லா சலுகைகளும் கிடைக்கும். ஓட்டுப்போடவில்லை என்றால் வாணியம்பாடிக்கு எந்தவொரு சலுகையும் வராது" என்று வெளிப்படையாகவே பேசுகிறார்.

சத்திய பிராமாணம் செய்து, உறுதிமொழி எடுத்தவர் விருப்பு, வெறுப்பு இல்லாமல் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நிலையுடன் செயல்பட வேண்டிய அமைச்சர் எப்படிப்பட்டப் பேச்சை இன்று பேசியுள்ளார் என்று பாருங்கள். அவர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று முழுமையாக தெரிகிறது. எப்படியாவது ஓட்டு வாங்கலாம் என்ற அடிப்படையிலே இந்த மிரட்டல் வேலையில் இன்றைக்கு ஈடுபட்டுள்ளார்கள்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, அராஜகம், தினம்தோறும் நடக்கும் கொலை, கொள்ளைகள், என தமிழகம் இன்று அமைதியை இழந்துள்ளது. எங்கள் ஆட்சி காலத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. மக்கள் இந்த நிலைமை அனைத்தையும் நினைத்துப் பார்த்து. ஆட்சியின் அவல நிலையை நினைத்துப் பார்த்து எங்களுக்கு வாக்களிப்பார்கள். இருசக்கர வாகனத்தில் சென்ற தாசில்தாரின் நகையை பறித்து விட்டார்கள். தி.மு.க. அரசின் அவல நிலைகளையும், கழக அரசின் சாதனைகளையும் மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். நிச்சயம் கழகம் வெற்றி பெறும். கழகத்தினர் எத்தனைப் புகார்கள் அளித்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது என்றார்.

Updated On: 16 Feb 2022 12:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...