Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசியா? சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
தமிழகத்துக்கு குறைந்த அளவு தடுப்பூசி வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
கொரோனா தொற்று இரண்டாம் அலைபரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணையில், தமிழகத்திற்கு குறைந்தளவு கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த விஷயம் எங்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழக அரசு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டினை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.