Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
கொரோனாவிற்கு தலைமைக் காவலர் உயிரிழப்பு - போலீசார் அதிர்ச்சி
சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் கொரோனாவால் உயிரிழந்தது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
HIGHLIGHTS
சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர் கருணாநிதி, வயது 48. இவர் கடந்த 13ஆம் தேதி வயிற்று வலி காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மறுநாள் (14.04.21) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஏப்.21 அன்று நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை 5.35 மணி அளவில் திடீர் மாரடைப்பு காரணமாக கருணாநிதி உயிரிழந்தார். அவரது மரணம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.