/* */

பெரம்பூர்: மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை முயற்சி

பெரம்பூரில், மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

பெரம்பூர்: மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை முயற்சி
X

சித்தரிப்பு படம்.

சென்னை பெரம்பூர் கென்னடி ஸ்கொயர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், வயது 32 பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நந்தினி என்ற மனைவி உள்ளார். நேற்று இரவு அம்பத்தூரில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது, ராஜேஷ் குடித்து விட்டு வந்துள்ளார். இதனை அவரது மனைவி நந்தினி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, முற்றியுள்ளது.

இதில் கோபம் அடைந்த ராஜேஷ், வீட்டில் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து தனக்குத் தானே வயிற்றில் குத்திக் கொண்டார். ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேஷ் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On: 17 Feb 2022 5:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்