/* */

சென்னையில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி சிக்கினான்

சென்னையில் வழிப்பறி வழக்கில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னையில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி சிக்கினான்
X

சென்னையில் 11 ஆண்டுகளுக்கு பின் கைதான ரவுடி பிரபு.

சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 11 ஆண்டுகளுக்கு முன்பு வழிப்பறி சம்பவம் ஒன்று நடந்தது. இதில் கொடுங்கையூர் மெட்ரோ வாட்டர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரபு என்கின்ற வெள்ள பிரபு(36) ஈடுபட்டிருந்தார். இவர் மீது வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் பிரபு கொடுங்கையூர் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாறி சென்று விட்டார். இதனால் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. அதுமட்டுமின்றி வியாசர்பாடி பகுதியில் பிரபு மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் பிரபு மீண்டும் கொடுங்கையூர் பகுதிக்கு வருவதாக வியாசர்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று கொடுங்கையூரில் உள்ள வீட்டில் இருக்கும்போது பிரவுவை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பிரபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Updated On: 5 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...