/* */

ஊழியர்களுக்கு கொரோனா சரவணா ஸ்டோர்ஸ் கடை மூடப்பட்டது

சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸின் 39 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடை மூடப்பட்டது

HIGHLIGHTS

ஊழியர்களுக்கு கொரோனா சரவணா ஸ்டோர்ஸ் கடை மூடப்பட்டது
X

சென்னை புரசைவாக்கம் கரியப்பா தெருவிலுள்ள சரவணா ஸ்டோர்ஸின் பணியில் உள்ள 39 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கடை மூடப்பட்டு சாலை முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: "தங்குமிடத்திலிருந்து தான் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், தங்குமிடமும், கடையும் ஒரே கட்டடத்தில் இருப்பதால் கடையும் மூடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 166 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் 13 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சனிக்கிழமை எடுக்கப்பட்ட 159 மாதிரிகளில் 26 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து ஊழியர்களும் இளைஞர்களாக இருக்கின்றனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. இருப்பினும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 19 April 2021 1:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?