/* */

தமிழகத்தில் மின்தடை இனியும் தொடருமா? அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது என்று, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் மின்தடை இனியும் தொடருமா? அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
X

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மின் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: தமிழகத்தில் இனி மின்தடை உறுதியாக இருக்காது. மாதாந்திர பராமரிப்புப்பணிகள் மட்டுமே நடைபெறும். மின்தடை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொத்தாம் பொதுவாக புகார்களை பதிவிடக் கூடாது.

புகார்களை, மின் இணைப்பு எண்ணுடன் குறிப்பிட வேண்டும். மேலும் மின் கட்டணம் அதிகமாக உள்ளதாக புகார்கள் வந்ததால், மின்சாரத்துறையின் சார்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் தவறுகள் இருக்கும் பட்சத்தில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Jun 2021 10:13 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்