/* */

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட்; செங்குன்றத்தில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

செங்குன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட்;  செங்குன்றத்தில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
X

செங்குன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

செங்குன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டமன்ற தொகுதி செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றம் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் ஜோதி தலைமையில் நடைபெற்றது.

மாதவரம் தொகுதி அமைப்பாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் புயல்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் நீலமேகம் கலந்துகொண்டு டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த பாஜக அரசை கண்டித்து கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் மகளிரணி ராசாத்தி ஜோதிபாஸ், நகர பொருலாளர் முனுசாமி மற்றும் நகர துணை செயலாளர்கள் குப்பன்கார்த்திக், சுப்பிரமணி, குப்பன், வினோதினி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 22 Dec 2023 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு