Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
புழல் சிறையில் விஜயகீதம் அறக்கட்டளையினர் மரக்கன்று வழங்கல்
சென்னை புழல் சிறையில் விஜயகீதம் அறக்கட்டளையினர் சார்பில் மரக்கன்று வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியில் விஜய்கீதம் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் கீதா ஓம் சரவணன் பல்வேறு நலத் திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை புழல் பகுதியில் உள்ள மத்திய சிறைச் சாலையில் மரக்கன்றுகளை வழங்கினார். பின்னர் பெண் கைதிகளுக்கு விஜய கீதம் அறக்கட்டளை சார்பில் பல்வேறு கைவினை பொருட்கள் செய்யும் பயிற்சிகளை கற்றுக்கொடுத்தனர்.
அதன்படி ஆடை வடிவமைப்பு தொடர்பான பயிற்சியினை பெண் கைதிகளுக்கு கற்றுக் கொடுத்தனர். மேலும் கூடை பின்னுதல் குறித்து பயிற்சியினை விரைவில் கற்றுத் தருவதாக தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.