/* */

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு புது கட்டுப்பாடு: தப்புவது எப்படி?

இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற நடைமுறை, சென்னை நகரில் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

HIGHLIGHTS

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு புது கட்டுப்பாடு: தப்புவது எப்படி?
X

சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க, போக்குவரத்துத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. சென்னையில் பகுப்பாய்வு செய்வதில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல், கடந்த 15ஆம் தேதி வரை இருசக்கர வாகன விபத்துகளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர் . 844 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க, இருசக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து இருப்பவருக்கும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, போக்குவரத்து காவல்துறை முடிவு செய்தது. அதன்படி, இந்த நடைமுறை, சென்னை நகரில் இன்று முதல் அமலாகி இருக்கிறது.

அதன்படி, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர கூட அமரக் கூடிய நபர் மீது, மோட்டார் வாகன சட்டத்தின்படி, அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே வாகன விதிகளை பின்பற்றி, பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிந்து, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் இருக்க, சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 23 May 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?