/* */

பத்திரப்பதிவுக்கு அலைமோதும் கூட்டம் : அச்சத்தில் அதிகாரிகள்

பத்திரப்பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பத்திரப்பதிவுக்கு அலைமோதும் கூட்டம் : அச்சத்தில் அதிகாரிகள்
X
சென்னை பத்திரப்பதிவு அலுவலகத்தில் குவிந்த கூட்டம்

தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் மூலமாக பத்திரப்பதிவு பணிகள் செய்யப்படுகிறது. ஊரடங்கால், கடந்த மே 10ல் மூடப்பட்ட இந்த அலுவலகங்கள், கடந்த ஜூன் 7ல் தமிழகத்தில் திறக்கப்பட்டது.

ஒரு அலுவலகத்திற்கு 50 சதவீத 'டோக்கன்' மட்டுமே அனுமதி வழங்கி கொரோனா கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப் பட்டது. ஜூன் 7ல் சார் பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளில் 4,600 பத்திரங்கள் பதிவானது. போக்குவரத்து வசதி இல்லாததே, இதற்கு காரணமாக கூறப்பட்டது.

தளர்வு காரணமாக பத்திரப்பதிவு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. ஆவண எழுத்தர்களின் கடைகளிலும், சார்பதிவாளர் அலுவலகத்தின் வெளியிலும், காத்திருப்போர் கூட்டம் அதிகரிக்கிறது.

இதை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப கூடுதல் டோக்கன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்

Updated On: 15 Jun 2021 6:38 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்