Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய அவசர ஊர்தி சேவை: முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு அரசின் 108 அவசரகால ஊர்தி சேவை பயன்பாட்டிற்காக கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய 10 புதிய அவசரகால ஊர்திகளின் சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த 10 அவசர ஊர்திகளில் 2 ஆம்புலன்சுகள் வழக்கமாக இயங்கும் ஆம்புலன்சுகள். மற்ற 8 ஆம்புலன்சுகள் மலைப்பகுதிகளில் வாழும் மக்களின் மருத்துவ சேவையை கருத்தில் கொண்டு டவேரா போன்ற வாகன மாடலில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மொத்த மதிப்பு ஒரு கோடியே 76 இலட்சத்து 87 ஆயிரத்து 472 ரூபாய் ஆகும்.