/* */

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவர்கள் செவிலியர்கள் தேர்வு..!

சென்னை மாநகராட்சி சார்பில் 150 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவர்கள் செவிலியர்கள் தேர்வு..!
X

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருவதால் அதனைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்புக்காக, மாநகராட்சி சார்பில் தலா 150 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

இவர்கள் ஓராண்டுகால ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மருத்துவர்களுக்கு மாத ஊதியமாக 60 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இதற்கான நேர்காணல் இன்றும் நாளையும் ரிப்பன் மாளிகையில் நடக்கிறது. இன்று நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்பதற்காக 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அசல் சான்றிதழ்களுடன் காலை முதல் வரிசையில் காத்திருந்தனர்.

தேர்வு செய்யப்படுபவர்கள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கோவிட் கேர் மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நியமிக்கப்படுவார்கள். பணி நிரந்தரம் செய்யக்கோரி எவ்வித போராட்டத்திலும் ஈடுபட மாட்டோம் என்பதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து பெற்ற பிறகு பணி ஆணை வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 29 April 2021 11:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’