Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வேகமாக காலியாகும் படுக்கைகள்!
சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்துவருவதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக காலியாகி வருகின்றன.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா 2வது அலை புரட்டி எடுத்து வருகிறது. சென்னையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இதனால் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் எற்படுத்தப்பட்டன.
இந்தநிலையில் கடந்த இரு தினங்களாக கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்துவருகிறது. குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னையில் தினசரி பாதிப்பு 7,500 என்று இருந்த நிலை மாறி, மார்ச் 22ம் தேதி 2,985 என்று குறைந்தது. அன்றிலிருந்து 3000த்தை கூட தாண்டாமல் உள்ளது.
சென்னை ராஜீகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 2050 படுக்கைகளில் தற்போது 1455 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். மற்ற 595 படுக்கைகள் காலியாகி உள்ளன. முழு ஊரடங்கினால் ஏற்பட்டுளள் நல்ல முன்னேற்றம் என்றே இது கருதப்படுகிறது.