Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
அரசு கொடுக்கும் 10 லட்சம் ரூபாயை, கொரோனா நிதிக்கு கொடுக்க, சங்கரய்யா முடிவு
தமிழக அரசு வழங்கும் 10 லட்சம் ரூபாயை, கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கே வழங்குகிறேன் என்று சங்கரய்யா தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
தமிழகத்திற்கும், தமிழ் இன வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு தமிழக அரசு 'தகைசால் தமிழர்' என்ற விருது அறிவித்துள்ளது.
விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கரய்யாவுக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்ட் திங்கள் 15 நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.தமிழக அரசு வழங்கும் 10 லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசுக்கே வழங்குவதாக சங்கரய்யா அறிவித்தார்.