/* */

3வது அலை பயமில்லை: காசிமேட்டில் மீன்களை வாங்க அலை மோதிய மக்கள்

கொரோனா பரவல் குறித்த பயமின்றி, சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

3வது அலை பயமில்லை: காசிமேட்டில் மீன்களை வாங்க அலை மோதிய மக்கள்
X

சமூக இடைவெளியை மறந்து, சென்னை காசிமேடு மீன் சந்தையில் திரண்ட மக்கள். 

சென்னை காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் பொதுவாக மீன்களை வாங்குவதற்கு மொத்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமாக கூடுவது வழக்கம். அதேபோல் இந்த வாரமும் மீன்களை வாங்குவதற்கு, சமூக இடைவெளி, தொற்று பரவல் அச்சமின்றி ஏராளமானோர் கூடினர்.

அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல், புரட்டாசி மாதம் தொடங்குவதால், பலரும் அசைவ உணவை தவிர்ப்பார்கள். அதனால், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையான இன்று, ஏராளமானோர் மீன்களை வாங்குவதற்காக காசிமேடு மீன் விற்பனை கூடத்திற்கு வந்தனர். கடந்த இரண்டு தினங்களாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீன் விற்பனை கூடத்தில் விற்பனை குறைவாக காணப்பட்டதால், இன்று மீன் பிரியர்கள் மீன்களை வாங்க ஆர்வத்துடன் வந்து சென்றனர்.

கடந்த சில நாட்களாக மீன்களின் விலை ஏற்றத்துடன் காட்டப்பட்ட நிலையில், இன்று மீன்களின் விலை குறைவாகவே இருந்தது. சிறிய வகை சங்கரா மீன் கூடை, 1800 ரூபாயாகவும், பெரிய வகை சங்கரா மீன் 3000 ரூபாயாகவும் இருந்தது. கானகத்தை 1500 ரூபாய், எறா 2000 ரூபாய், நண்டு 2,500 ரூபாய், பெரிய வகை மீன்களான பர்லா, கேரை, சூரை போன்ற மீன்கள் ஒரு மீன் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 12 Sep 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்