/* */

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு

தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி நடக்க உள்ள ஊராக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு
X

விஜயகாந்த் பைல் படம்

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி என 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. போட்டியிட விரும்பும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை நாளை (16ம் தேதி), நாளை மறுநாள் (17ம் தேதி) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணியளவில் அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிப்பதற்கு கட்சியின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.4 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரமும் விருப்ப மனு கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Sep 2021 12:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது