Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
குழந்தைகளை நெருங்கும் கொரோனா அச்சத்தில் பெற்றோர்..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 256 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையில், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ஒன்று முதல் எட்டு வயது வரையுள்ள குழந்தைகள் இந்த மாறுபட்ட கொரோனா வைரஸ் வகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
ஆகையால், குழந்தைகளை அனைத்து தடுப்பு நடவடிகைகளையும் கடைபிடிக்க பழக்கப்படுத்த வேண்டும். பெற்றோரும் மிகுந்த எச்சரிக்கையை கையாண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.