Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
ஏப். 30 க்குள் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள பள்ளி கல்வித்துறை அட்வைஸ்
தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
HIGHLIGHTS
இது தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முன்களப்பணியாளர்கள் ஆகியோர் துரிதமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
மேலும், அதுகுறித்த விவர அறிக்கையை பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். கொரோனா தடுப்பு தொடர்பான பணிகளில் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து கல்வி அதிகாரிகள் பணிபுரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.