/* */

கரும்பூஞ்சை பாதித்தவரை நேரில் சென்று நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின்

கரும்பூஞ்சை பாதித்தவரை ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று உதயநிதி ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

HIGHLIGHTS

கரும்பூஞ்சை பாதித்தவரை நேரில் சென்று நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின்
X

கரும்பூஞ்சை பாதித்தவரை ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறும் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை: கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நபரை திருவல்லிக்கேணி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியம் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

திருவாலாங்காடு காவல் நிலைய தலைமைக்காவலர் புஷ்பராஜ். சில நாட்களாக கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்டார்.

இதனையடுத்து உடனடியாக அங்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆகியோர் புஷ்பராஜ் அவர்களை நேரில் சந்தித்து அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தனர்.

அதன் பின்னர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரும்பூஞ்சை சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து அங்கு சிகிச்சை பெற்று வருவோர்களிடம் நலம் விசாரித்தனர்.

Updated On: 8 Jun 2021 11:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  5. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  6. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  7. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  8. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  9. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  10. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...