/* */

விளம்பர சுவரொட்டிகளை அகற்ற சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் செலவுத்தொகை வசூலிக்கப்படும் -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சுவரொட்டிகள் அகற்றுவதற்கான செலவினம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் இருந்து வசூலிக்கப்படும். -சென்னை மாநகராட்சி

HIGHLIGHTS

விளம்பர சுவரொட்டிகளை அகற்ற சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் செலவுத்தொகை வசூலிக்கப்படும் -சென்னை மாநகராட்சி அறிவிப்பு
X



பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக ஒட்டப்படும் சுவரொட்டிகள் அகற்றுவதற்கான செலவினம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் இருந்து வசூலிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர், அரசு முதன்மைச் செயலாளர் ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 2022யை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தலில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை மூன்றாம் கட்டமாக கணினி முறையில் தேர்ந்தெடுக்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் முதன்மை செயலாளர் ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நேற்று ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படைக் குழுக்களின் வாகனங்களையும் மாவட்ட தேர்தல் அலுவலர் முதன்மை செயலாளர் ஆணையாளர் கொடியசைத்து

தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் / முதன்மை செயலாளர் /ஆணையாளர் தெரிவித்ததாவது:

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களுக்கான சாதாரணத் தேர்தல் - 2022 யை முன்னிட்டு, 26.012022 மாலை 6.30 மணி முதல் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அரசு மற்றும் பொதுக்கட்டடங்கள், தனியார் இடங்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மாநகராட்சி பணியாளர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடாமல் தேர்தல் சம்மந்தப்பட்ட துண்டு பிரசுரம், நோட்டீஸ் எதையும் அரசியல் கட்சிகள் அச்சடிக்கக்கூடாது எனவும், பொதுக் கட்டடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் தேர்தல் குறித்த சுவரொட்டி ஒட்டுவது மற்றும் விளம்பரங்கள் எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் 29.01.2022 அன்று நடைபெற்ற மாதிரி நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை பொது இடங்களில் 1831 சுவர் விளம்பரங்கள், 10,348 சுவரொட்டிகள், 104 பேனர்கள், 840 இதர விளம்பரங்கள் என மொத்தம் 13,123 விளம்பரங்கள் மாநகராட்சி பணியாளர்களால் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் 34 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தனியார் இடங்களில் 17 சுவர் விளம்பரங்கள், 18,453 சுவரொட்டிகள், 525 பேனர்கள், 793 இதர விளம்பரங்கள் என மொத்தம் 21,448 விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் 14 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை தேர்தல் நடத்தை விதிமீறல் மற்றும் கோவிட் பாதுகாப்பு தொடர்பான விதிமீறல் என மொத்தம் 69 வழக்குகள் காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ளன. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் (Posters) மற்றும் வில்லைகளை (Stickers) அகற்றிடவும், சுவரொட்டிகளை அகற்றுதலுக்கான செலவினத் தொகையினை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து பெற்றிடவும், சென்னை உயர்நீதிமன்றத்தால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் மீது தனிக்கவனம் செலுத்தி, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், மின் பெட்டிகள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை (Posters) அவர்களாகவே உடனடியாக அகற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் சுவரொட்டிகளை அகற்றுவதற்கான செலவினத் தொகையினை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் வசூலிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959ன் படி (Tamilnadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959) காவல் நிலையத்தில் புகார் அளித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் அரசு முதன்மைச் செயலாளர் ஆணையாளர் திருக்ககன்தீப்சிங் பேடி, தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சிகளில் தேர்தல் பார்வையாளர்கள் திரு. வி.தட்சிணாமூர்த்தி, இஆ.ப. அவர்கள், திரு.ஏஜான் லூயிஸ், இ ஆய, அவர்கள், டாக்டர் டி. மணிகண்டன், இ ஆயா, அவர்கள், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் முனைவர் ஜெ.விஜயாராணி, இ ஆய, (சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்) , விஷு மஹாஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Feb 2022 5:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...