/* */

சாலையோரம் சுற்றி திரிந்த ஆதரவற்றோர்: உதவிக்கரம் நீட்டிய உதவி காவல் ஆணையாளர்

தாம்பரம் பேருந்து நிலையத்தில் தங்கி இருந்த ஆதரவற்றோர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தாம்பரம் காவல் உதவி ஆணையாளர்.

HIGHLIGHTS

சாலையோரம் சுற்றி திரிந்த ஆதரவற்றோர்: உதவிக்கரம் நீட்டிய உதவி காவல் ஆணையாளர்
X

தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி திரிந்த ஆதரவற்றோர்களை மீட்டு காப்பகத்திற்கு உதவி காவல் ஆணையாளர் சீனிவாசன் அனுப்பி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறவினர்களால் கைவிடப்பட்டோர் பல இன்னல்களில் நடுவில் வசித்து வருகின்றனர். மேலும் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

ஊரடங்கு போடப்பட்ட போது சமூக ஆர்வலர்கள் ஆதரவற்றவர்களுக்கு மூன்று வேலையும் உணவளித்து வந்தனர். இதனால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றோர் எண்ணிக்கை அதிகரித்தது.

தற்போது தளர்களுடன் ஊரடங்கு போடப்பட்டதால் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்கள் உணவின்றி தவித்து வந்தனர். இதை அறிந்த தாம்பரம் உதவி காவல் ஆணையாளர் சீனிவாசன் அவர்கள் சாலையோரம் உணவின்றி தவித்து வந்த ஆதரவற்றோரை தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 8 பேரை மீட்டு தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களுக்கு உணவளித்து, புத்தாடை கொடுத்து அவர்களை தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

விரைவில் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றோர் அனைவரையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Aug 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்