/* */

சென்னை திமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்பில்லாத நபர் கோர்ட்டில் சரண்

சென்னை மடிப்பாக்கம் திமுக பிரமுகர் செல்வம் கொலை வழக்கில் தொடர்பில்லாத நபர் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது

HIGHLIGHTS

சென்னை திமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்பில்லாத நபர் கோர்ட்டில் சரண்
X

சென்னை மடிப்பாக்கம் திமுக பிரமுகர் செல்வம் கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த சதீஷ்

சென்னை மடிப்பாக்கம் 188வது வார்டு வட்ட செயலாளரும், திமுக பிரமுகருமான மடிப்பாக்கம் செல்வம் கடந்த பிப்.1ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கிஷோர், விக்னேஷ், சஞ்சய், விக்னேஷ், புவனேஸ்வர் உள்ளிட்ட 5 பேரை விக்கிரவாண்டியில் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்திருந்தனர். பின்னர் அருண் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன் பிறகு இன்று வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ் என்பவர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவர் இவ்வழக்கில் தொடர்புடைய முருகேசன் என்பவனின் கூட்டாளி என கூறப்படுகிறது. சரணடைந்த நபர் குறித்து மடிப்பாக்கம் போலீசாருக்கு தெரியபடுத்தியபோது போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தேடப்படும் சதீஷ், இவர் இல்லை என்றும், அவர் சண்டே சதீஷ் என கூறியதன் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார்.

தலைமறைவாக உள்ள கூலிப்படை தலைவன் முருகேசனை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். இவரை பிடித்தால்தான் கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். சரணடைந்த சதீஷிடம் மடிப்பாக்கம் போலீசார் விசாரித்தும் வருகின்றனர்.

Updated On: 10 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  9. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  10. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை