/* */

மனைவியை கத்தியால் குத்தி கொலை: கணவன் காவல் நிலையத்தில் சரண்

மனைவியின் மீதுள்ள சந்தேகத்தால் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

HIGHLIGHTS

மனைவியை கத்தியால் குத்தி கொலை: கணவன் காவல் நிலையத்தில் சரண்
X

காவல் நிலையத்தில் சரணடைந்த ஆறுமுகம்.

சென்னை கண்ணகி நகரில் வசித்து வருபவர் ஆறுமுகம்(60), கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி(50). இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆறுமுகம், கஸ்தூரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இன்று மதியம் சண்டை அதிகமாகி உருட்டுக் கட்டை தலை மற்றும் வயிற்றில் அடித்து, கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கண்ணகி நகர் காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தார்.

பின்னர் நிகழ்விடத்திற்கு சென்ற கண்ணகி நகர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் நிலையத்தில் சரணடைந்த ஆறுமுகத்திடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 24 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?