/* */

சென்னை பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில நபர் கைது

சென்னை பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில நபர் கைது
X

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைதான மணிராமுடன் போலீசார் உள்ளனர்.

சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய பகுதியில் சந்தேகிக்கும்படி இருந்த வடமாநில நபரை பிடித்து விசாரித்ததில் அவரது இருசக்கர வாகனத்தில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த மணிராம்(45), என்பதும், பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கஞ்சாவை பதுக்கி வைத்து சிறு சிறு பொட்டலங்களாக போட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அந்த தகவலின் பேரில் அவரது வீட்டை பெரும்பாக்கம் போலீசார் சோதனை செய்த போது அங்கு 6 கிலோ கஞ்சா இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தமாக 11 கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் மணிராமை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 29 Aug 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்